ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வருகின்ற 14-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில், முதல் நாளன்று ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. தேசிய ஜநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க பாஜக மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக, கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதேவேளையில், தேர்தல் நாளன்று, அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென கொறடா உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…