இந்தியாவின் மாநிலங்களவை என்று அழைக்கப்படும் ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்த 55 காலி இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறும் என, அறிவிக்கப் பட்டிருந்தது. இதில், 37 வேட்பாளர்கள், ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில், மீதி, 18 இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தலை, வரும் 31 ம் தேதிக்குப் பின் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்தலில், அரசியல் கட்சிகளின் முகவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இணைந்து பணியாற்ற வேண்டும் என்ரும்,கொரோனா பரவுவதை தடுக்க, கூட்டம் கூடாமலிருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.இதனால், ராஜ்யசபா தேர்தலை, 31ம் தேதிக்குப் பின் ஆலோசித்து நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ராஜ்யசபா செயலகம், வரும்,27 வரை மூடப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…