இந்தியாவின் மாநிலங்களவை என்று அழைக்கப்படும் ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்த 55 காலி இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறும் என, அறிவிக்கப் பட்டிருந்தது. இதில், 37 வேட்பாளர்கள், ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில், மீதி, 18 இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தலை, வரும் 31 ம் தேதிக்குப் பின் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்தலில், அரசியல் கட்சிகளின் முகவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இணைந்து பணியாற்ற வேண்டும் என்ரும்,கொரோனா பரவுவதை தடுக்க, கூட்டம் கூடாமலிருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.இதனால், ராஜ்யசபா தேர்தலை, 31ம் தேதிக்குப் பின் ஆலோசித்து நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ராஜ்யசபா செயலகம், வரும்,27 வரை மூடப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…