கடந்த நவம்பர் மாதம் 18 -ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் நிறைவேறியது.
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் “ரேப் இன் இந்தியா” என பேசி இருந்தார். ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எங்களுக்கு நீதி வேண்டும் என கோஷம் இட்டனர்.மேலும் ராகுல்காந்தி பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் இன்று கடைசி நாள் அவை கூடியதில் இருந்து அமளி ஏற்பட்டதால் மக்களவையையும் , மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர்கள் அறிவித்தனர்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…