விவசாயி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்த ரூ.2 லட்சத்தை துண்டாடிய எலிகள்…! உதவிக்கரம் நீட்டிய தெலுங்கானா அமைச்சர்…!

Published by
லீனா

தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது. 

தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ரெத்ய நாயக் தனது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு ரூ.2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். இந்த பணத்தை அவர் ஒரு பருத்தி பையில் போட்டு, அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்த பணம் முழுவதையும் எலிகள் மென்று, துண்டாடி உள்ளது.

இதனையடுத்து, அந்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், காய்கறிகளை விற்ற பின் அந்த பணத்தை ஒரு பருத்தி பையில் சேமித்து அலமாரியில் வைத்து இருந்தேன். மீண்டும் அந்த பணத்தை தேவைக்காக பயன்படுத்த பையை திறந்தபோது 500 ரூபாய் நாணயத்தாள்கள் அனைத்தும் எலிகளால் சேதமாக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பணத்தை மாற்றுவதற்காக உள்ளூர் வங்கிகள் அனைத்திற்கும் சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவரது கோரிக்கையை மறுத்ததாகவும் இந்த பணம் இனிமேல் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்து அவரை ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கானா பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்தியவதி ரத்தோட் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டு அந்த விவசாயிக்கு உதவ முன்வந்துள்ளார். அவரிடம் அவருக்கு விருப்பமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ளுமாறும், அதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து அமைச்சருக்கு, ரெத்ய நாயக்  தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

3 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

4 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

4 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

5 hours ago