தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது.
தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ரெத்ய நாயக் தனது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு ரூ.2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். இந்த பணத்தை அவர் ஒரு பருத்தி பையில் போட்டு, அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்த பணம் முழுவதையும் எலிகள் மென்று, துண்டாடி உள்ளது.
இதனையடுத்து, அந்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், காய்கறிகளை விற்ற பின் அந்த பணத்தை ஒரு பருத்தி பையில் சேமித்து அலமாரியில் வைத்து இருந்தேன். மீண்டும் அந்த பணத்தை தேவைக்காக பயன்படுத்த பையை திறந்தபோது 500 ரூபாய் நாணயத்தாள்கள் அனைத்தும் எலிகளால் சேதமாக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பணத்தை மாற்றுவதற்காக உள்ளூர் வங்கிகள் அனைத்திற்கும் சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவரது கோரிக்கையை மறுத்ததாகவும் இந்த பணம் இனிமேல் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்து அவரை ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானா பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்தியவதி ரத்தோட் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டு அந்த விவசாயிக்கு உதவ முன்வந்துள்ளார். அவரிடம் அவருக்கு விருப்பமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ளுமாறும், அதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து அமைச்சருக்கு, ரெத்ய நாயக் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…