மாஸ்டர் கார்டு டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை..!

Published by
murugan

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை.

புதிய மாஸ்டர்கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இப்போது புதிய  வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், பணம் செலுத்தும் முறை தரவு சேமிப்பிற்கான வழிமுறைகளுக்கு இந்த நிறுவனம் இணங்கவில்லை என்று ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குப் பிறகு, வங்கிகளால் புதிய மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. இருப்பினும்,  புதிய தடையால் பழைய மாஸ்டர் கார்டு தொடரும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  வாடிக்கையாளர் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர்கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago