மும்பையில் கன மழை வெள்ளத்தால் மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பல்வேறு இடங்களில் இன்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. காலை தொடங்கியும் தற்போது வரை சில இடங்களில் மழை நீடித்துக் கொண்டே தான் உள்ளது. விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் முக்கிய இடங்கள் பல மும்பையில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் அத்தியாவசியமாக பணிகளுக்கு செய்பவர்களுக்காக இயங்கும் புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவசர சேவைகளில் செயல்படக்கூடிய அரசு அலுவலர்கள் தவிர ஏனைய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மேலும் கனமழை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…