Categories: இந்தியா

டி.கே.சிவகுமார் வழக்கை ரத்து செய்ய மறுப்பு! 3 மாதங்களில் வழக்கை முடிக்க சிபிஐக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடக துணை முதல்வரும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் எஃப்ஐஆரை  ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவகுமாரும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கர்நாடகாவில், கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்த தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், டி.கே.சிவகுமார் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக, ரூ.74.93 கோடிக்கு சொத்து சேர்த்ததாக டிகே சிவகுமார் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக டி.கே.சிவகுமார் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2019 செப்டம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், 2019 அக்டோபரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மூன்று வருட விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத் துறை வழக்கில் 2022 மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனிடையே, சொத்துகுவிப்பு வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற‌ப்பட்டது.

இதை எதிர்த்து சிவகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. உயர் நீதிமன்ற தடையில் தலையிட மறுத்து, சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதனிடையே, தன்மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிகே சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் எஃப்ஐஆரை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சிவகுமார் தொடர்ந்த வழக்கை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்ட  கர்நாடக உயர்நீதிமன்றம், 3 மாதங்களில் இவ்வழக்கின் விசாரணையை நிறைவுசெய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு ஆணையிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

1 hour ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

2 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

3 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago