கொரோனா பீதியில் உதவ முன்வராத உறவினர்கள்.! கொட்டும் மழையில் தந்தையின் உடலை சைக்கிளில் தள்ளி சென்று அடக்கம் செய்த அவல சம்பவம்.!

Published by
Ragi

கொரோனா பரவும் என்ற அச்சத்தில் இறந்த முதியவரின் இறுதி சடங்கிற்கு உறவினர்கள் உதவவில்லை என்பதால் கொட்டும் மழையில் தந்தையின் உடலை சைக்கிளில் வைத்து தள்ளி கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்த அவல சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யவில்லையாம்.

மேலும், அந்த முதியவர் உடல்நிலை சரியில்லாமலும் இருக்க, நேற்றைய முன்தினம் அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். உடனடியாக இறந்தவரின் உடலை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸிற்கு அழைத்த போது, ஆம்புலன்ஸ் வரவில்லையாம் . மேலும் சுகாதாரத் துறை ஊழியர்களும் அடக்கம் செய்ய முன்வரவில்லையாம்.

ஏனெனில் இறந்தவர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படாத காரணத்தால் அவர்கள் வரவில்லையாம். மேலும் குடும்பத்தில் உறவினர்கள் யாரும் கொரோனா அச்சத்தால் இறுதி சடங்கிற்கு உதவ முன்வரவில்லையாம்.

அதனையடுத்து இறந்த முதியவரின் மகன் மற்றும் மருமகன்  இருவரும் இணைந்து கிராம பஞ்சாயத்து வழங்கிய பிபிஇ கிட்களை அணிந்து கொண்டு இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் கவரால் மூடி கொண்டு கனமழையில் சடலத்தை சைக்கிளில் வைத்து தள்ளி கொண்டே மயானத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

இந்த அவல சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

5 hours ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

5 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

6 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

7 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

9 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

9 hours ago