தங்க கடத்தல் தொடர்பாக கேரள முதல்வரின் முதன்மை செயலர் நீக்கம்

Published by
Venu

தங்கம் கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு பார்சல் வந்துள்ளது.எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு செய்தி  வந்தது.இதனையடுத்து சுங்கத்துறை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரகதூதரகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருந்துள்ளது.

இந்த பார்சலை எடுக்க வந்த சரித் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும்  ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.இதனால் மக்கள் தொடர்பு அலுவலராக தூதரகத்தில்  பணியாற்றிய சரித் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வப்னா என்பவரும் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக பணிபுரிந்து பின்னர் பதவியை விட்டு விலகியதும் விசாரணையில் தெரியவந்தது.  ஸ்வப்னா கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும்  தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. எனவே இவரிடமும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu
Tags: #KeralaGold

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago