ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் வைரஸின் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் திதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி கொரோனா குறித்தும், ஊரடங்கு நீடிப்பதா, தளர்வு செய்யப்படுவதா என்பதை பற்றியும் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சில மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…