Categories: இந்தியா

Reservation : 2000 ஆண்டுகளாக சக மனிதர்களிடம் பாகுபாடு இருக்கிறது.! இடஒதுக்கீடு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் பரபரப்பு கருத்து.!

Published by
மணிகண்டன்

கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் மராத்தா சமூகத்தினர் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். அதில், தங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து , தங்களுக்கு உரிய இடஒதுக்கீடு வேண்டும் என போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதன் பிறகு அந்த போராட்டத்தில் , வன்முறை ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். பல்வேறு வழக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அம்மாநில தலைநகர் மும்பையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. மராத்தா சமூகத்தினர் இது தொடர்பாக தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா, நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு குறித்து பேசினார். அவர் கூறுகையில், தற்போது வரை சமூகத்தில் சக மனிதர்களை பின்தங்கிய நிலையில் வைத்துள்ளோம். அவர்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கடந்த 2000 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

அவர்களுக்கு சமத்துவம் அளிக்கும் வரை, சில சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் இடஒதுக்கீடும் முக்கியமான ஒன்று. எனவே, அத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு முறையானது தொடர வேண்டும். அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்பாக நாங்கள் அனைத்து ஆதரவையும் வழங்குகிறோம் என தெரிவித்தார்.

மேலும், சமூகத்தின் கடந்த 2000 ஆண்டுகளாக இனபாகுபாடுகளை எதிர்கொண்டிரு இருக்கிறோம். இன்னும் 200 ஆண்டுகளுக்கு இதனை நாம் எதிர்கொள்ள கூடாது எனவும் மோகன் பகவத் அந்த விழாவில் தெரிவித்தார். இதனை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றி பேசுகையில், 1947 இல் இந்தியாவிலிருந்து பிரிந்தவர்கள் (பாகிஸ்தான்) இப்போது தங்கள் முடிவுக்கு வருந்துகிறார்கள் மற்றும் இந்தியாவுடன் மீண்டும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள் எனவும் தனது கருத்தை குறிப்பிட்டார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

39 minutes ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

2 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

3 hours ago

மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

4 hours ago