ரவுடி விகாஷ் துபே விவகாரம்.! அரசாங்க அம்பாசிடர் கார் பறிமுதல்.!

Published by
Ragi

கான்பூரில் ரவுடி விகாஷ் துபேயின் சகோதரர் வீட்டிலிருந்து அரசாங்க அம்பாசிடர் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட கான்பூரில் உள்ள பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, அவரை கைது செய்ய 15 பேர் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதனை அறிந்த விகாஷ் துபே மற்றும் அவரது ஆட்கள் , போலீசாரை சுற்றி வளைத்து சுட்டதால்  8 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது லக்னோ காவல்துறை, விகாஷ் துபேயின் சகோதரரின் வீட்டிலிருந்து அரசாங்க வாகனம் ஒன்றை மீட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது, கடந்த 2004-ம் ஆண்டு அம்பாசடர் கார் ஒன்றை மாநில அரசால் வாங்கப்பட்டு, ஆளுநரின் முதன்மை செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளாக பயன்படுத்திப்பட்ட இந்த காரை 2014-ல் ஏலம் விட்ட போது விகாஷ் துபேயின் சகோதரரான தீப் பிரகாஷ் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் அந்த காரை தனது பெயரில் மாற்றம் செய்யவில்லை, வரிகளையும் செலுத்தவில்லை . மேலும் இந்த அம்பாசிடர் காரை அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் சந்திக்க அவருக்கு வழங்கியதாக கூறியதாக போலீஸார் தெரிவித்தார். இந்த காரை தவிர அதே தயாரிப்பில் உள்ள புல்லட்ப்ரோஃப் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் விகாஷ் துபே நேபாளம் அல்லது அண்டை மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரை கைது செய்வதற்கான தகவல் தருபவர்களுக்கு ரூ. 50,000 பரிசு தொகையை உத்தரப்பிரதேச போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

14 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago