முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம், 2 ஆண்டுகள் சிறை.. கேரள அரசு அதிரடி!

Published by
Surya

கேரளாவில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,522 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் நடவடிக்கையாக, கேரளாவில் ஜூலை 2021 வரை பொதுமுடக்க விதிமுறைகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது, எச்சில் துப்புவது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால், அங்கு ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்கு திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என சில காட்டுப்பாடுகளை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீடித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

33 minutes ago

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியிடலாம்..,’மிரட்டல்களை அனுமதிக்க முடியாது’ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…

54 minutes ago

திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

3 hours ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

4 hours ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

4 hours ago