நிதியமைச்சரின் 2 ம் கட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

இன்றைய அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட  அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில், ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும், இந்த அறிவிப்பில் சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் விதமாக கருதப்பட்டது. இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அம்சங்கள். அதாவது, இன்றைய அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும், ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீட்டிப்பு.
  • 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அடுத்த 2 மாதங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானிங்கள் வழங்க ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முத்ரா திட்டத்தில் வட்டி சலுகைக்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபார்ட் வங்கி மூலம் ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
  • நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 23 மாநிலங்களில் அமலுக்கு வருகிறது என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 100% அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
  • சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு. இதில், ரூ. 10,000 வரை கடன் வழங்கப்படும்.
  • 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தை (ESI) பெறலாம்.
  • ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும் அனைவரும் ஒரே ஊதியத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ரேஷன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவு பொருள் வழங்கப்படும்.
  • குறைந்த விலை வீட்டுக்கான வட்டி மானிய திட்டத்திற்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

9 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago