ரஷ்யா-உக்ரைன் போர்- ஹேக் செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவின் கணக்கு..!

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை ஹேக் செய்யப்பட்டது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்த பின்னர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரஷ்யா, உக்ரைன் உதவி தொடர்பான ட்வீட்களை ஹேக்கர்கள் பதிவிட்டனர்.
அதில், “உக்ரைனுக்கு நன்கொடை அளிக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு உதவி தேவை. எனது கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. அனைத்து நன்கொடைகளும் உக்ரைன் அரசாங்கத்திற்கு வழங்கப்படும்” என எழுதப்பட்டு இருந்தது. இதற்கிடையில் ஹேக் செய்யப்பட்ட நட்டாவின் ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது. அதில், பிட்காயினை இந்தியா அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக ட்வீட் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025