ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவே அதை அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு டெல்லி ஹைகோர்ட்டில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேலும் நான்கு பேர் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் விரைவில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து, ஏப்ரல் 20ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் நேற்று பிற்பகல் விரிவான பதில் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் திருமணம் என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயானது என்றாலும் அதை தனிநபர் சுதந்திரம் என்று வரையறுக்க முடியாது எனவும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உடல்ரீதியாக குடும்பமாக சேர்ந்து வாழ்ந்தாலும் யார் கணவர் யார் மனைவி என்பதை பிரித்தறிய முடியாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பதால், முன்பிருந்த சட்டங்களை மீறுவதாக அமைந்து விடுவதுடன், இந்த சட்டங்கள் அனைத்தும் பார்லிமென்டில் விவாதிக்கப்பட்டு தான் வகுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர் மற்றும் ஒவ்வொரு மதங்களின் அடிப்படையிலும் வகுக்கப்பட்டுள்ள இந்த திருமண பந்தத்தை ஒரே பாலினத்தவர் செய்து கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும், அப்படி ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதில் நாட்டில் மிகப் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…