ஆந்திராவில் செப்., 21 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.!

Published by
Ragi

ஆந்திராவில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை . சில இடங்களில் ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகளையும், கல்லூரிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தளர்வுகளின் படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் பெற்றோரின் அனுமதி கடிதத்தையும் எடுத்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிஎச்டி படிக்கும் மாணவர்களின் வகுப்புகளும் வரையறுக்கப்பட்ட கட்டுபாட்டுகளுடன் தொடங்கவுள்ளது. அது மட்டுமின்றி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகளையும், ஜூனியர் கல்லூரிகளையும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று திறந்தவெளி திரையரங்குகளை திறக்கவும், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Published by
Ragi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

3 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

3 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

4 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

4 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

5 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

5 hours ago