தென் கொரியாவைச் சேர்ந்த SD Biosensor என்ற நிறுவனம் ஹரியானாவில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது .
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை நெருங்குகிறது . இதுவரை 640 பேர் பலியாகியுள்ளனர் 3,870 குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1383 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது ,ஆனால் அதில் துல்லியமான தகவல்கள் வருவதில்லை என்றும் ரேபிட் கிட்டில் எடுக்கப்படும் பரிசோதனைகள் 6% முதல் 70% வரை மாறுபட்ட முடிவுகளாக வருவதாக குற்றச்சாட்டிய நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு ரேபிட் கிட்டில் மாநில அரசுகள் பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ,ஹரியானாவின் மானேசர் நகரத்தில் கொரோனா வைரஸிற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளைத் SD Biosensor என்ற நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியுள்ளது, இது வாரத்திற்கு 5,00,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை தயாரிக்கும் எனவும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அதை பூர்த்தி செய்ய வரும் வாரங்களில் இது மேலும் மேம்படுத்தப்படும் என்று தென்கொரியாவில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது .
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…