இந்திய குடிமை சிவில் சர்வீஸ் தேர்வில் i.a.s. பணிக்கான தேர்வில் வெற்றி பெற்ற கண்பார்வை இழந்த பூர்ண சுந்தரி எனும் பெண்ணிற்கு சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமைப்பணி தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஐஎஸ் கான இடத்தில் வெற்றிபெற்றுள்ள மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாணவி பூரண சுந்தரிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் பேசும் பொழுது, பார்வை மாற்று திறனாளியான இவர் தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் சீர்மிகு உயரத்தை கட்டி பெண்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமின்றி, தோல்விகள் மற்றும் தடைகளாலும் சோர்வுறும் மனிதர்கள் அனைவருக்குமே புதிய ஊக்கத்தையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும் விதைத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
மேலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கேற்ற கடின உழைப்பும் இருந்தால் எத்தகைய தடைகளையும் உடைத்தெறிந்து முன்னேறலாம் என்பதற்கு என் அன்புத்தங்கை பூரண சுந்தரி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, மக்கள் பணியில் சிறந்து விளங்கவும் மேலும் பல சாதனைகள் படைத்திடவும் தங்கைக்கு எமது புரட்சி வாழ்த்துக்கள் என சீமான் கூறியுள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…