Categories: இந்தியா

2040க்குள் சந்திரனுக்கு இந்தியரை அனுப்ப வேண்டும்.! பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 ஆகிய இரண்டு திட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது . இதனை அடுத்து தங்கள் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று டெல்லியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி துறையினர்,விண்வெளி துறையில் இஸ்ரோவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி விண்வெளி துறையினருக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அக்.21ல் ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, இந்திய விண்வெளித்துறை சார்பாக, விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க வேண்டும். இதனை 2035க்குள் செயல்படுத்த வேண்டும் என்றும், அதே போல விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், 2040க்குள் நிலவுக்கு இந்தியரை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கான சோதனைகள் வரும் அக்டோபர் 21இல் துவங்க உள்ளது. அன்று 3 ஆளில்லா விண்கலம் மற்றும் 20 முக்கிய விண்வெளி சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இது போக வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மார்ஸ் லேண்டர் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது என மத்திய விண்வெளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

3 minutes ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

48 minutes ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

3 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

4 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

4 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

5 hours ago