மகாராஷ்டிராவில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் உள்ள நேரு சவுக் என்ற இடத்தில் அமைந்துள்ள ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதியான ஐந்தாவது தளத்திலிருந்து அடுக்குமாடி முழுவதுமாக இடிந்து விழ தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீடுகளுக்குள் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவ்வப்போது மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று முழுமையான விவரம் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், உயிரிழந்த 7 பேரை தவிர இன்னும் நான்கு பேர் உள்ளே இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதே போல அந்த பகுதியில் கடந்த 15ஆம் தேதி ஒரு குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago