இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களில் மூன்றாவது பெரிய மற்றும் பிரபலமான எச்.சி.எல். நிறுவனத்தை கடந்த 1976 ஆம் ஆண்டு சிவ நாடார் அவரது நண்பர்களுடன் ஆரம்பித்தார். இது உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவை தலைமை இடமாக கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60% க்கும் அதிகமான அளவு பங்குகள் உள்ளது. இந்த நிறுவனத்தை 45 வருடத்திற்கும் மேலாக நடத்தி வந்த சிவ நாடார் தற்போது இவரின் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு தற்போது வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, இவர் எச்.சி.எல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் ராஜினாமாவிற்கு பிறகு இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜயகுமார் தற்போது நிர்வாக இயக்குநராக பதவியேற்றுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…