மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் – சஞ்சய் ராவத்

Default Image

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்று  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல்  மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த அங்கு மீதமுள்ள கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது .ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் வெற்றி கிடைக்காத நிலையில் தொடர்ந்து குழப்பமே நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்  கூறுகையில் ,சிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh
S-400 air defense system