அதிர்ச்சி : கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!

Published by
Rebekal

கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நாய்கள், குரங்குகள், மயில்கள் ஆகிய விலங்குகளுக்கு எதிரான வதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கும், விலங்கினங்கள் மீட்பு படைக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கிராமத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், நூற்றுக்கும் அதிகமான நாய்களின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் காவலர்களின் உதவியோடு இந்த நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஷிவமோகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இதை கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் தான் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், கிராம பஞ்சாயத்து இதை மறுத்துள்ளது.

மேலும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எதற்காக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை எனவும், பிரேதப் பரிசோதனைக்குப் பின்பதாகவும், கால்நடை மருத்துவர்களின் ஆய்வுக்குப் பின்னும் தான் உண்மை தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! 

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

28 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

5 hours ago