மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு.
நெதர்லாந்தில் இருக்கும் Vrije Universiteit Amsterdam-ல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது சர்வதேச அளவில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களை Microplastics என்று அழைப்பார்கள். இந்த துகள் தான் மனித ரத்தத்தில் செல்களோடு, செல்களாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மொத்தம் 22 பேரின் ரத்தத்தை சோதனை செய்தனர். அதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. கூடுதல் ஆய்வுகளை நடத்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவ கவுன்சிலுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விஞ்ஞானிகள் 22 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பிளாஸ்டிக் துகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…