மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.50,000 நன்கொடையாக அளித்த 3 வயது சிறுவன் கபீரின் வீடியோவை மும்பை போலீஸ் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து இருப்பதால், நான்காவது கட்ட ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடிய வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வைரஸை எதிர்த்து இரவு பகலாக போராடி வருகின்றனர். இதனிடையே காவல்துறை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வெளியில் வராமல் வைரஸிடம் இருந்து பாதுகாத்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தகுந்த மரியாதையும், சிறப்பு தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.50,000 நன்கொடையாக அளித்த 3 வயது சிறுவன் கபீரின் வீடியோவை மும்பை போலீஸ் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், அந்த சிறுவனை கப்கேக் விற்று திரட்டிய ரூ.50,000 காசோலையுடன் ஒரு கடித்தை சேர்த்து அளித்துள்ளான். அந்த கடிதத்தில், அன்புள்ள போலீஸ் மாமா, எங்களை நன்றாக கவனித்துக்கொண்டதற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளான. மேலும், தயவுசெய்து கொரோனா வைரஸைப் பிடித்து உங்கள் துப்பாக்கியால் சுட்டுவிடுங்கள் என்றும் ரூ.50,000 க்கான காசோலையை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங்குக்கு அந்த சிறுவனின் பெற்றோர்களுடன் சேர்ந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…