கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 77 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர்கள் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கியமான அமைச்சர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்தனர். மேலும், இந்த கொரோனா தொற்று காரணமாக உச்சநீதிமன்றத்தை சேர்ந்த 77 வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரை அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு, நீதிமன்றப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை உச்ச நீதிமன்றத்திற்கு வந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் தனது நீதிமன்ற பணியைத் தொடங்குவதற்கு முன்பதாக கொரோனவால் உயிரிழந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த 77 உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…