பரபரப்பு…மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த எம்.எல்.ஏவின் கார்;23 பேர் காயம்!

Published by
Edison

பஞ்சாயத்து சமிதி தலைவர் தேர்தலின் போது, ​​ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் பான்பூர் பிளாக் முன்பு கூடியிருந்த கூட்டத்தின் மீது சனிக்கிழமையன்று(நேற்று) சிலிகாவின் பிஜேடி எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் தனது காரை மோதியதில்,காவல்துறையினர் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பான்பூர் தொகுதி அலுவலகம் அருகே,அத்தொகுதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

பான்பூர் ஐஐசி, எம்எல்ஏ அவர், ஒரு பத்திரிகையாளர் உட்பட பத்து காவல்துறையினர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவத்தால் பதற்றம் நிலவியதுடன்,எம்எல்ஏவின் வாகனத்தை அங்கிருந்த மக்கள் அடித்து நொறுக்கினர்.இதனால்,காவல்துறையினர் தலையிட்டு எம்.எல்.ஏவை அந்த இடத்திலிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது.எனினும்,பலத்த காயம் அடைந்த எம்எல்ஏ பிரசாந்த்,முதலில் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,பின்னர் அவர்  மேல்சிகிச்சைக்காக புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக,மத்திய ரேஞ்ச் ஐஜி நரசிங் போலா  கூறுகையில்:”பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்எல்ஏவை காவல்துறையினரும் சிலரும் கூட்டத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றபோதும்,எம்எல்ஏ தடுக்கப்படுவதைத் தவிர்க்க முயன்றபோதும் அவர் தனது வாகனத்தை கூட்டத்தின் மீது மோதினார்.எனவே,அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கூறினார்.

இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக பிஜேடி தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:”ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, சாமானியனாக இருந்தாலும் சரி வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது”என்று கூறினார்.

இதற்கு முன்னதாக,செப்டம்பரில்,பிரசாந்த் ஜக்தேவ் தனது சிலிகா தொகுதியின் பிஜேபி தலைவரைத் தாக்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பிஜேடியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.ஆகஸ்ட் 2020 இல், ஜூனியர் இன்ஜினியர் ஒருவர், ஜக்தேவ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.மேலும்,2016 ஆம் ஆண்டும், பெண் தாசில்தாரை தாக்கியதாக பிரசாந்த் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

7 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

7 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

8 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

8 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

9 hours ago