கேரளா மாநிலத்தில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பரப்பிய சிவானந்தர் காலமானார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் எனும் ஊரில் 1946 ஆம் ஆண்டு கொச்சன் – பொலியாள் தம்பதிக்கு 12-வது மகனாக பிறந்தவர் தான் சிவானந்தர். இவர் தனது சிறு வயதில் இருந்தே திருக்குறள் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். இதனையடுத்து மக்களிடம் திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதை தனது முழுநேரப் பணியாக செய்து வந்துள்ளார். இவரது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் சிவானந்தர் உடன் இணைந்து திருக்குறள் சிந்தனைகளை மக்களிடம் பரப்புவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன்பின் இவர்கள் இருவரும் இணைந்து பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடம் எனும் அமைப்பை நிறுவி உள்ளனர். உலகம் போற்றும் தமிழராக கொண்டாடப்படும் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை கேரளாவில் மலையாள மொழி பேசக்கூடிய மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் தான் கேரள மாநிலத்தவர் சிவானந்தர். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு சிவானந்தர் காலமாகியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…