போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையேயான துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு!

Published by
Rebekal

ஆந்திராவில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின்  திகலமெட்டாவில் கிரேஹவுண்ட்ஸ் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக இன்று அதிகாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை போலீசார் கண்டறிந்ததும், போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியிலிருந்து ஏகே 47 துப்பாக்கி மற்றும் மற்ற பிற துப்பாக்கிகளும் கண்டறியப்பட்டு உள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியிலிருந்து தப்பி சென்ற மாவோயிஸ்டுகளை போலீசார் ஹெலிகாப்டர் மூலமாக தேடி வருகின்றனராம்.

Published by
Rebekal

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago