வேளாண் அதிகாரி தவறாக பேசியதால் தான் அடித்தேன் என வீடியோ மூலம் பேசி இணையத்தில் பதிவிட்டுள்ளார் சண்டிகர் பாஜக பிரமுகர் சோனாலி போகட்.
கடந்த ஆண்டு அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சோனாலி போகட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவசாய சந்தைக்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் செயலாளர் சுல்தான் சிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சோனாலி, தனது செருப்பால் வேளாண் அதிகாரியை அடித்துவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அப்போது போலீஸ் விசாரணை முடிந்தபின்பு தனது, இணையதள பக்கத்தில் வீடியோ ஒன்றை சோனாலி பதிவிட்டார். அதில், தன்னை அந்த அதிகாரி தவறாக பேசியதாகவும், அந்த இடத்தில் ஒரு பெண் என்ன செய்திருப்பாளோ அதனை தான் நான் செய்தேன். அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறன். தூக்குத்தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.’ என அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…