காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காணொளி காட்சி மூலமாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி அனல்பறக்கும் விவாதத்துடன் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. காங்கிரஸ் கட்சியில் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்றும் அடுத்த ஆறு மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…