ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது – தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில் வெற்றியடைந்து, அதில் தேர்ச்சி பெற்ற 541 பேருக்கு திருச்சி பொன்மலை ரயில்வே நிலையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் 40 பேர் மட்டுமே தமிழர்கள். இதனால் ரயில்வே தேர்தலில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தை திருச்சி பொன்மலையில் தொடங்கினர்.
இது தொடர்பாக அண்மையில் தெற்கு ரயில்வேயானது விளக்கமளித்துள்ளது. அதில் ரயில்வே பணிகளில் எந்தவித பாகுபாடுமின்றி பணி நியமனம் நடைபெற்று வருகிறது. சென்னை, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், பெங்களூர், புவனேஸ்வர், திருவனந்தபுரம், கவுகாத்தி உட்பட 21 இடங்களில் ரயில்வே பணி நியமன ஆணையம் உள்ளது.
இந்த பணி நியமன ஆணையங்கள் மூலமாகவே அனைத்து பணியாளர்களும் முறையாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். திருச்சி பொன்மலையில் கடந்த 4ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இவர்களுக்கு மத்திய அரசின் அறிவுரைப்படி ஆகஸ்ட் 31ம் தேதி பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.
2018 ஆம் ஆண்டில் ரயில்வேதுறையில் 3,218 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில், 51 சதவீதம் பேர் தமிழர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 17 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உரிய கல்வி தகுதியை பெறவில்லை எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 17 சதவீதத்தில் 53% பெயர் லோகோ பைலட் பணி மற்றும் டெக்னிக்கல் பணிகளில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே பணியை பொருத்தவரை ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே மண்டலம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…