Categories: இந்தியா

மாமியாரை கரம் பிடித்த மருமகன்… பீகாரில் வினோத சம்பவம்.!

Published by
கெளதம்

Marries Mother In Law: பீகார் மாநிலம் பாங்காவில் இருந்து வந்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட காதல் கதை கடைசியில் திருமணமாக முடிந்துள்ளது. இந்த சம்பவம் பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தையும் தாண்டி பரவ தொடங்கியது. இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த பலரும், எப்படி இப்படியொரு நிலை உருவாகும் என்று யோசித்து சமூக வலைதளங்ளில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பீகாரை சேர்ந்த சிக்கந்தர் யாதவின் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவி இறந்த பிறகு, சிக்கந்தர் தனது மாமியார் வீட்டில் வசிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில், மாமியார் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வலையில் விழுந்துள்ளனர்.

இந்த காதல் நாளடைவில் பெரியதாக வளர, நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த காதல் விவகாரம் மாமனாருக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருப்பதை அறிந்ததும், மாமனார் ஊர் பஞ்சாயத்தை கூட்டி உள்ளார்.

இந்நிலையில், ஊர் பஞ்சாயத்தில் வைத்து மாமியார் மீதான காதலையும் தாங்கள் நெருக்கமாக இருந்ததையும் அனைவரது முன்னிலையில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஊர் பஞ்சாயத்தும் இதற்கு சம்மதம் தெரிவித்து. அவரது மாமனார் தலைமையில், மாமியார் மற்றும் மருமகன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Published by
கெளதம்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

13 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

14 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

15 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

17 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

17 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

18 hours ago