Categories: இந்தியா

ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுதலாம்.! கர்நாடக அரசு முடிவு.!

Published by
மணிகண்டன்

கர்நாடகாவில் கடந்த 2022ஆம் ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் , மாணவர்களிடத்தில் மிக பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட விவகாரம் என்றால் அது பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கூடாது என்ற விவகாரம் தான் .

கடந்த வருடம் உடுப்பி அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத சென்ற போது கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இது பெரும் சர்சையாகவே , மாணவிகள் போராட்டம் கர்நாடக மாநிலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது.

பரபரக்கும் தெலுங்கானா தேர்தல் களம்.! முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த பாஜக.!

இறுதியில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாணவிகள், கல்வி நிறுவனங்களில் இருக்கும் சீருடைகளை மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் மாநில அரசாக உள்ளது. இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக கல்வி அமைச்சர் சுதாகர், முதல்வர் சித்தராமையா  உடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் கூறுகையில், கர்நாடகாவில் , அரசு நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி கல்லூரி தேர்வுகளிலும்  மாணவிகள் சுதந்திரமாக அவர்கள் விருப்பம் போல உடை அணிந்து தேர்வுகளை எழுதலாம் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago