Byjus founder's house raided in Bengaluru. Raveendran [Image Source : Twitter]
Byjus நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பரிமுதல்.
பெங்களுருவில் உள்ள பைஜூஸ் நிறுவன (Byjus) சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் திடீர் சோதனை நடைபெற்றுள்ளது.
2011-23 வரையிலான காலகட்டத்தில் பைஜூஸ் நிறுவனம் ரூ.28,000 கோடி அந்நிய நேரடி முதலீடு பெற்றதில் விதிமீறல் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2020-21-ம் ஆண்டுக்கான நிதி விவரங்கள், கணக்குகளை பைஜூஸ் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை புகார் கூறியுள்ளது.
பைஜூஸ் நிறுவனம் வழங்கிய விவரங்களை கொண்டு உண்மை தன்மை ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக பைஜூஸ் சி.இ.ஓ. ரவிச்சந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
எனவே, அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், பெங்களூருவில் Byjus நிறுவனர் ரவீந்திரன் தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…