நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதற்காக கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கும் பணி தொடங்கி, ஆகஸ்ட் 14ம் தேதி வரையில் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேறு சில படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறுவதால் நீட்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சில பேர் கேட்கிறார்கள் என்பதற்காக 16 லட்சம் பேர் எழுதக்கூடிய நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க இயலாது எனக் கூறி, நீட் தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…