பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் அக்., 28ந்தேதி இடைத்தேர்தல் மொத்தம் 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
71 இடங்களுக்கு அக்.,28ந்தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 3 ஆம் தேதி 94 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீதமுள்ள 78 இடங்களுக்கு மூன்றாம் கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பீகாரில் பாஜகவின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான சுஷில் குமார் மோடி அரசியல் நடவடிக்கைகளில் சில காலமாக விடுபட்டிருந்தார்,தேர்தல் நேரத்தில் எங்கே அவர் என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தான் சுஷில் குமார்க்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து சுஷில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்
தொற்று உறுதி செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளார்.மேலும் விரைவில் குணமடைவேன் என்று பதிவிட்டுள்ளார்.
பீகார் மாநில துணைமுதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் சுஷில் குமார் மோடி ஆகிய இருவரும் கூட்டுத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…