பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் – மத்திய வேளாண் அமைச்சர்!

Published by
Rebekal

விவசாயிகள் நலன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு நிரந்தரமாக தீர்வு விரைவில் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் கூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்டமாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எதுவும் போராட்டத்துக்கு தீர்வாக அமையவில்லை. விவசாயிகள் நிரந்தரமாக இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே தற்பொழுது வரையிலும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட கூடிய விவசாயிகள், உழவர் சங்கங்கள் உடனான முறையான பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்பு அவர்களின் நலனுக்காக தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொண்டு விரைவில் போராட்டத்தை கைவிடுவார்கள் எனவும், பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் எனவும் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

21 minutes ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

1 hour ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

2 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

3 hours ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

4 hours ago