தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசியில் ஆறுதல் கூறியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி அவர்கள், நேற்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். தாயார் கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தமிழிசை அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழிசை அவர்கள் தனது ட்விட்டர் பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் இன்று காலை 10.00 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது தாயாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் அலுவலக பணிகளுக்குக்கிடையே நேரம் ஒதுக்கி ஆறுதல் தெரிவித்தது எனக்கு உந்துதல் சக்தியாக புதிய மனபலத்தை தந்தது. அவர்தம் வழிகாட்டுதலில் புதிய உத்வேகத்துடன் மக்கள் பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…