வருகிற 26 ஆம் தேதி உயிரிழந்த தருண் கோகாய் அவர்களின் உடல் நவக்கிரக மைதானத்தில் தகனம் செய்யப்படும் என அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாகிய தரும் கோகாய் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் வீடு திரும்பினார். இருப்பினும் கடந்த 1 ஆம் தேதி மீண்டும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.
நீண்ட காலம் அசாம் முதல்வராக பணியாற்றய தருண் அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி நவகிரக தகன மைதானத்தில் வைத்து தருண் கோகாய் அவர்களின் உடல் தகனம் செய்யப்படும் என அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மூன்று நாள் அசாமில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…