டாடா குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி நிதியுதவி – ரத்தன் டாடா அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 909 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு நோய் தடுப்பு பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

அண்மையில் பிரதமர் மோடியும் விருப்பமுள்ளவர் நிதியுதவி தரலாம் என்று தெரிவித்திருந்தார். கொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் டாடா சன்ஸ் சார்பில் ரூ.1000 கோடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டாடா குழுமம் சார்பில் மத்திய அரசுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ரத்தன் டாடா அவரது ட்விட்டர் பக்கத்தில், கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வது கடினமான சவால்களில் ஒன்றாகும். டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக உதவியுள்ளது என்றும் அதை விட தற்போது உள்ள நிலை மிகமுக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்கான அவசர தேவைகளுக்கு ரூ.500 கோடி நிதி வழங்குவதாக குறிப்பிட்டார்.

டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவியில் இந்த உபகரணங்களை வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது :

  • மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்.
  • அதிகரிக்கும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கச் சுவாச கருவிகள்.
  • தனிநபர் சோதனையை அதிகரிக்கும் வகையில் சோதனைக் கருவி.
  • பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்.
  • சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் அறிவு மேலாண்மை மற்றும் பயிற்சிக்காகவும் செலவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

4 hours ago