நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிஹார் ரயில் நிலையத்தில், வட மேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ‘நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வே பங்களிப்பாக இருக்கும் என்றும், நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 400 ரயில் நிலையங்களில் தேநீர் மண்கோப்பைகளில் வழங்கப்படுகிறது என்றும், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும், மண்கோப்பைகளில் மட்டுமே தேனீர் விற்பனை செய்யப்படும் என்பது எங்களது திட்டம் ஆகும்.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…