அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வரும் சிறுபான்மையின மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் சட்டமமானது நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.இந்நிலையில் இச்சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்தது.அதே போல் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தற்போது தெலுங்கானா சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்துக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.இந்நிலையில் இது குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலோர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளது.இதுகவலை அளிக்கிறது. ஆகவே அவற்றை நடைமுறைபடுத்தும் போது, மக்களை காக்க வேண்டியது, இந்த அரசின் கடமை. என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…