ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக தெலங்கானா அரசு பட்ஜெட்டில் அதிரடியாக அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 2 முறையாக சந்திரசேகராவின் இராட்டிர சமிதி கட்சி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.அம்மாநில நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் நிலுவை வைத்துள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளின் கடன் எல்லாம் ஒரே அடியாக முடித்து வைக்கப்படுகிறது என்று கூறிய அவர் இதற்காக மாநில அரசானது ஆயிரத்து 198 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த கடன் தள்ளுபடி தொகைகளை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழியாக விவசாயிகளிடம் நேரடி சென்று காசோலையாக வழங்கப்படும் என்றும் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 738 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு விவசாயிகளின் 24ஆயிரத்து 738கோடி ரூபாய் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…