சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட வனப்பகுதியில், நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட ரிசா்வ் படை, சிறப்பு பணிக் குழு, மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றை சோ்ந்த 600 வீரா்கள் அப்பகுதியை நோக்கி சென்றனா். அப்போது கோரச்குடா மலைப் பகுதி அருகே சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுள்ளனா். பின்னர் இருதரப்பினருக்கும் நீண்ட நேரமாக கடும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த தாக்குதலில், பல வீரர்கள் தொடர்புகொள்ள முடியாமல் போனது. இதில் படுகாயமடைந்த 14 வீரர்கள் ராய்ப்பூர் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, துப்பாக்கி சூட்டின் போது மாயமான 17 வீரா்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி வன்மையாக கண்டித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 17 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…