காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரு மாதங்களுக்கு முன்னர் கூட இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், கடலோர எல்லைகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், குஜராத் கடலோர பகுதிகளில் ஆளில்லா படகுகள் நிற்கவைக்க பட்டிருந்தன. மீண்டும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.
தற்போது வந்த தகவலின்படி காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பானது தற்போது பதன்கோட்டில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் வட இந்தியாவின் சில பகுதிகளை தாக்குவதற்கு திட்டம் தீட்டி வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அவர்களின் குறி பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவர் ஆகியோர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமானப்படையில் தற்போது ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…