தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலை பெற்ற நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்க்காகவும் மற்றும் கொரோனாவை வீழ்த்துவதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் அந்த செய்தியை பதிவிட்டிருந்த நிலையில், தற்போது பிரதமரும் தமிழில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில், திமுக 158 இடங்களில் முன்னிலை வகித்து, முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கிறார். அதிமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதுபோல அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 4 முதல் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…