நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைத்தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கார்த்திகை தீப திருநாள் அன்று அறிவித்தார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை பல அரசியல் தலைவர்களும், விவசாயிகள் வரவேற்றனர். மேலும், சில கோரிக்கைகளை முன் விவசாயிகள் அதில், விவசாய சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.
நாளை மறுநாள் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விவசாய சங்கத்தினர் இன்று ஒன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா நாளை மறுநாள் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…