ஊழியர்களுக்கு கைகொடுத்துவிட்டு கையை துடைத்தாரா ராகுல்காந்தி.? பாஜக குற்றசாட்டு.! காங்கிரஸ் பதிலடி.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ஊழியர்களுக்கு கைகொடுத்துவிட்டு கையை துடைத்ததாக பாஜக குற்றம் சாட்டியது. அதற்கு காங்கிரஸ் தரப்பு பதில் கூறி விமர்சனம் செய்துள்ளது.  

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு கர்நாடக பிரச்சாரத்தில் பேசுகையில், மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் ராகுல்காந்தி. அதனை தொடர்ந்து அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அவருக்கு வழங்கப்பட்டது.

RAHULGANDHI
[Representative Image]

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் டெல்லியில் ராகுல்காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து சாவியை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அரசு பங்களாவை வேலை பார்த்த ஊழியர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்த விடியோவை குறிப்பிட்டு பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா சமூக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், அரசு பங்களாவை காலி செய்யும் போது வீட்டு ஊழியர்களிடம் கைகுலுக்கிவிட்டு ராகுல்காந்தி தனது பேண்டில் கையை துடைத்ததாக குற்றம் சாட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், இந்த ஆண்கள்/பெண்கள் என ஊழியர்கள் அனைவரும் அவருக்கு பல ஆண்டுகளாக சேவை செய்திருக்க வேண்டும். அவர்களிடம் ராகுல்காந்தி அலட்சியமாக நடந்து கொள்கிறார் என பதிவிட்டு இருந்தார். 

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிதின் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒட்டி வெட்டப்பட்ட வீடியோவை பரப்பியதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த வீடியோ எடிட் செய்யும் சமயத்தில் உங்கள் நேரம் வீணாகவில்லையா? காலையில் எழுந்து வீடியோவை எடிட் செய்து, அதை பாதியாக வெட்டி, உங்கள் தலைவரை மகிழ்விக்க நாள் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரப்புங்கள் என பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

32 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

1 hour ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago