ஊழியர்களுக்கு கைகொடுத்துவிட்டு கையை துடைத்தாரா ராகுல்காந்தி.? பாஜக குற்றசாட்டு.! காங்கிரஸ் பதிலடி.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ஊழியர்களுக்கு கைகொடுத்துவிட்டு கையை துடைத்ததாக பாஜக குற்றம் சாட்டியது. அதற்கு காங்கிரஸ் தரப்பு பதில் கூறி விமர்சனம் செய்துள்ளது.  

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு கர்நாடக பிரச்சாரத்தில் பேசுகையில், மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் ராகுல்காந்தி. அதனை தொடர்ந்து அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அவருக்கு வழங்கப்பட்டது.

RAHULGANDHI
[Representative Image]

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் டெல்லியில் ராகுல்காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து சாவியை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அரசு பங்களாவை வேலை பார்த்த ஊழியர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்த விடியோவை குறிப்பிட்டு பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா சமூக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், அரசு பங்களாவை காலி செய்யும் போது வீட்டு ஊழியர்களிடம் கைகுலுக்கிவிட்டு ராகுல்காந்தி தனது பேண்டில் கையை துடைத்ததாக குற்றம் சாட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், இந்த ஆண்கள்/பெண்கள் என ஊழியர்கள் அனைவரும் அவருக்கு பல ஆண்டுகளாக சேவை செய்திருக்க வேண்டும். அவர்களிடம் ராகுல்காந்தி அலட்சியமாக நடந்து கொள்கிறார் என பதிவிட்டு இருந்தார். 

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிதின் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒட்டி வெட்டப்பட்ட வீடியோவை பரப்பியதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த வீடியோ எடிட் செய்யும் சமயத்தில் உங்கள் நேரம் வீணாகவில்லையா? காலையில் எழுந்து வீடியோவை எடிட் செய்து, அதை பாதியாக வெட்டி, உங்கள் தலைவரை மகிழ்விக்க நாள் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரப்புங்கள் என பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

3 minutes ago

தலைமை காஜி மறைவு…விஜய் முதல் இபிஎஸ் வரை இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…

47 minutes ago

தோனிக்கு இதுதான் கடைசி போட்டி…பண்டிகை மாதிரி கொண்டாடுங்க! வேண்டுகோள் வைத்த முகமது கைஃப்!

அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…

2 hours ago

ED-க்கும் பயமில்லை..பிறகு எதுக்கு உதயநிதியின் கூட்டாளிகள் தலைமறைவு? நயினார் நாகேந்திரன் கேள்வி!

சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…

2 hours ago

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் ரொனால்டோ? ஸ்கெட்ச் போடும் முக்கிய அணிகள்!

அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…

3 hours ago

மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றா செயல்படனும்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…

3 hours ago